சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு காலத்தில் தொகுதி வளர்ச்சிக்காக மிகச்சிறந்த திட்டங்களை செய்து வந்திருக்கிறார் ஜெயவர்தன். இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டியதற்கு, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் நல்ல மருத்துவமனைகளை கொண்டு வந்திருக்கிறார். தொகுதி முழுவதும் ஏழை எளிய மக்களிடம் இயல்பாக பழகுகிறார்.நாடாளுமன்றத்தில் ஜெயவர்தன் தென் சென்னைக்காக போராடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
பின்னர் ஜெயவர்தன் பேசியதாவது:
பள்ளிக்கரணையில் ரூ.33 கோடியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிய பல்நோக்கு மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்டு முதல்கட்ட பணிகள் முடிந்துள்ளன. தென் சென்னையில் 85 விதமான துறைகளில் பயிற்சி அளிப்பதற்கு தேசிய பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் போராடி இந்த தேசிய பயிற்சி நிறுவனம் அமைய பாடுபட்டேன். இந்த பயிற்சி நிறுவனங்களில் தற்போது 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். என்னை வெற்றி பெற செய்தால், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவ்வாறு ஜெயவர்தன் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி